சென்னை:

மிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பணி மாறுதல் வழங்க பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்டு ஒரே இடத்தில் பணிபுரியும் கல்வித்துறை பணியாளர்களை கலந்தாய்வு நடத்தி பணி மாறுதல் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, பள்ளிகள்,  மாவட்ட கல்வி அலுவலகங்கள், முதன்மை கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் இதன்மூலம் மாற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.