சென்னையில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழைபெய்து வந்த நிலையில், நேற்று இரவு முதல் கனத்த மழை பெய்துவருகிறது.

அண்ணா நெடும்பாதை நேரு தெருவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

இன்று ஒரே நாளில் 20.7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால், நீர்வழி தடங்கள் அனைத்தும் அடைத்துக்கொண்டதை அடுத்து நகரின் தாழ்வான பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகள் அனைத்தும் குளம் போல் தண்ணீர் தேங்குகின்றது.

நேற்று இரவு திடீரென பெய்த மழையால் மழைநீர் வடிகால்கள் மற்றும் சுரங்கப்பாளங்களில் நீர் நிரம்பியதை தொடர்ந்து உட்புற சாலைகளிலும் நீர் தேங்கியுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் சென்னை மாநகராட்சியை தொடர்புகொள்ள அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

044-25619206
044-25619207
044-25619208

மழை பாதிப்பு குறித்து மேலே உள்ள எண்களை தொடர்பு கொண்டு மக்கள் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 அடி சாலையில் இருந்து சூளைமேடு செல்லும் பெரியார் பாதை வீடியோ