சென்னை:  ஆதாருடன் மின் இணைப்பு எண்னை இணைக்க நுகர்வோருக்களுக்கு கூடுதல் 2 நாள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதுடன், ஆதாரரை இணைத்த பிறகே மின் கட்டணம் வசூலிக்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தின் சார்பாக மின் இணைப்புகளை நுகர்வோர்கள் தங்களது ஆதாருடன் இணைக்க வேண்டும் என அண்மையில் தெரிவித்தது. ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணை இணைந்திருந்தால்தான் அரசு வழங்கும் முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.  தொடர்ந்து, ஆதார் எண்ணை இணைக்கும்படி  நுகர்வோர்கள் மின்சார நுகர்வு எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது.  அதற்கான இணையதள லிங்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, பயனர்கள் தங்கள் ஆதார் கார்டு விபரங்களை இதன்மூலம் https://www.tnebltd.gov.in/adharupload இணைத்து கொள்ளலாம்.

தற்போது, தமிழகத்தில் உள்ள 2.36 கோடி மின் பயனாளர்கள், 21 லட்சம் விவசாய இணைப்புகள் மற்றும் கைத்தறி விசைத்தறி தொழிளார்கள் ஆகியோர் தங்கள் 100 யூனிட்கள் கட்டணமில்லா மின்சாரத்தை தொடர்ந்து பெற ஆதாரை இணைக்க தமிழக மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி மக்களை குழப்பி வருகின்றன.

இதற்கிடையில், ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் வைத்துள்ளவர்கள் ஒரே ஆதாரை எப்படி இணைப்பது என்ற கேள்வி எழுந்து வந்தது. .இதற்கு தமிழக மின்வாரியம் பதில் அளித்துள்ளது.

தமிழகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்துள்ளவர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் தங்கள் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வைத்துள்ள நிலையில், அனைத்து மின் இணைப்புகளுக்கு ஒரே தொலைபேசி எண்ணை இணைத்துள்ளனர். இந்த நிலையில், அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை தங்கள் பெயரில் கொண்ட நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்புகளுடன் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம். இதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை என்றும் இது மின் இணைப்புகளை ஒழுங்குபடுத்தும் நடைமுறை என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வாடகை வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் தங்கள் ஆதார் எண்ணை அந்த வீட்டு மின்இணைப்புடன் இணைக்கவும், இதற்கான வசதிகளும் மின்வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைப்படி வீட்டுப் பயனாளர்கள், விவசாய இணைப்புகள், கைத்தறி மற்றும் விசைத்தறி நுகர்வோர்கள் என அனைவரும் ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணை இணைந்திருக்க வேண்டும். இன்னும் ஆதார் பெறாதவர்கள், புதிதாக ஆதாருக்கு விண்ணப்பித்த நகலுடன் பாஸ்புக், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, பான் கார்ட், பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் வைத்து இலவசம் மற்றும் மானிய விலை மின்சாரத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள மற்றொர உத்தரவில்,  ஒரு இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார சேவை இருந்தால், இரண்டுக்கு மேலுள்ள மின்சார சேவைகள் வணிக பயன்பாடாக மாற்றப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆதார் மற்றும் மின் நுகர்வோர் எண்ணை இணைக்கும்போது, ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட இலவச மற்றும் மானிய விலை மின்சார சேவைகளை பெறுவதைத் தடுக்கலாம்.

தற்போதைய நடைமுறையின்படி, முதல் 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு  ரூ.450 வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டின் உரிமையாளராக இருந்தால் அவர் இந்த இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்தின் மூலம் அதிக பலனடையலாம்.

ஒருவேளை அவர் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால், வாடகைதாரரின் பெயரை வாடகைதாரர் என்று மின்சார கழகத்தில் பதிவு செய்து முதல் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகப் பெறலாம். அவர் வீட்டைக் காலி செய்தாலும் அடுத்த வாடகைதாரரின் பெயரைப் பதிவு செய்து முதல் 100 யூனிட் இலவச மின்சாரத்தை பெற்றுக் கொள்ளலாம்.  இதன்மூலம் இலவச மின்சாரத்தை வீட்டு உரிமையாளர்கள் மட்டுமே அனுபவிக்காமல், வாடகைதாரர்களும் அனுபவிக்கலாம்.

பல பேர், ஒரே வீட்டுக்கு மாடிகளைக் கணக்கில்காட்டி ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார சேவைகளைப் பெற்றுள்ளனர். இதனால் இவர்களது மற்ற மின்சார சேவைகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகப் பெறுகின்றனர். 1000 யூனிட்டுக்குமேல் மின்சாரம் பயன்படுத்தும்போது, அவர்களிடம் யூனிட் ஒன்றுக்கு ரூ.12 கட்டணமாக வசூலிக்கப்படும். உதாரணமாக, மூன்று மாடிகள் கொண்ட வீட்டின் உரிமையாளர் ஒருவர், ஒவ்வொரு மாடிக்கும் தனித்தனி மின்சார சேவைகளை வைத்திருப்பதாக வைத்துக்கொள்ளலாம்.

இதனால், ஒரே இடத்தில் இருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார சேவைகளை வணிக பயன்பாடாக மாற்றும்போது இலவச 100 யூனிட் மின்சாரத்தைத் தடுக்கலாம்.  ஆதார் எண்ணை மின்சார நுகர்வோர் எண்ணுடன் இணைக்கும்போது இச்சலுகைகளை பெறும் ஒரே இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார சேவைகளை வைத்திருப்போர் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளின் உரிமையாளர்களை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அப்பார்ட்மென்ட் போன்ற இடங்களில் தனி மீட்டர்கள் இருப்பதால் அங்கே வசிப்பவர்களுக்கு இந்த நடைமுறை பாதிப்பு ஏற்படுத்தாது.

அப்பார்ட்மென்டுகளில் இருக்கும் லிப்ட், பூங்கா ஆகிவற்றின் மின்சார பயன்பாடு 1டி பயன்பாட்டில் சேர்க்கப்படுவதில் மாற்றம் இல்லை. மேலும், இந்த நடைமுறை வணிக பயன்பாடு, விவசாய இணைப்புகள், கைத்தறி மற்றும் விசைத்தறி இணைப்புகளை பாதிக்காது. இந்த அனைத்து நடவடிக்கைகளுமே வருவாய் கசிவுகளைத் தடுக்க ஏற்படுத்தப்பட்டதாகும். மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் நேரடியாக ஈடுபடவில்லை. இந்த இணைப்பு தமிழக அரசு மூலம் நடப்பதால், தனிப்பட்ட விபரங்கள் கசியாது’ என்று கூறினார்.

இந்நிலையில் ஆதாருடன் மின் இணைப்பு எண்னை இணைக்க நுகர்வோருக்களுக்கு கூடுதல் அவகாசம் அளித்துள்ளது. ஆதார் எண்ணை இணைத்த பிறகே மின்கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.