சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, மின்சார ரெயில்கள் சேவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, பயணிகளின் வசதிக்காகக தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது. அதுபோல  மெட்ரோ ரயில் சேவைகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில் சேவை, சென்னை மக்களின் ஆபத்பாந்தவன்  இருந்து வருகிறது. இதை நம்பியே பல லட்சம் பேர் தங்களது பணிகளுக்கு சென்று வருகின்றனர். இதன் பராமரிப்பு  பணிகளுக்காக அவ்வப்போது சேவைகளில் மாற்றம் செய்யப்படுவதும், விடுமுறை தினங்களில் சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும் வழக்கமாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில், கடற்கரை தாம்பரம் இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுவதால், தாம்பரம்- செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளையும், மெட்ரோ ரயில்களையும் இயக்க அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்த நிலையில்,  தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு நாளை கூடுதலாக 150 பஸ்கள் இயக்கம் செய்யப்படுவதாக  அறிவிக்கப்பட்டு உள்ளது. தாம்பரம் முதல் கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.