கெய்ரோ: எகிப்து ஓபன் ஸ்குவாஷ் தொடரில், இந்திய வீரர் செளரவ் கோஷல் மூன்றாவது சுற்றில் தோல்வியடைந்தார்.
இதே தொடரின் பெண்கள் ஒற்றையர் போட்டியில், தமிழ்நாட்டின் ஜோஷ்னா காலிறுதிக்கு முன்னேறிய நிலையில், ஆண்கள் பிரிவில் இந்தியாவின் செளரவ் கோஷல் தோற்றுள்ளார்.
தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், எகிப்து நாட்டின் ஹஷ்ஹெமை எதிர்கொண்டார். அதில், 8-11, 9-11, 8-11 என்ற செட் கணக்கில் தோற்று தொடரிலிருந்து வெளியேறினார்.