சென்னை: அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனைவருக்கும் கல்வி போதிக்கலாம் என முதல்வர் ஸ்டாலினை சந்தித்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

‘தமிழகத்தைச் சேர்ந்த இஸ்ரோ  விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இன்று தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மயில்சாமி அண்ணாதுரை, மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தாக கூறினார். தொடர்ந்து,  கல்வி, தொழில், வேலைவாய்ப்பு என பல துறைகளும் கொரோனா ஊரடங்களால் பின்னடவை சந்தித்துள்ளதாகவும், இதை சரிசெய்வதற்கான அறிவியல் தொழில்நுட்ப சார்ந்த திட்டத்தை வகுக்க முதலமைச்சரை அறிவுறுத்தியதாக தெரிவித்தார் .

மேலும்,  கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை அறிவியல் தொழில்நுட்பம் மூலம் ஈடுசெய்வது குறித்து திட்டம் தயாரிக்க அறிவுறுத்தியதாக கூறியவர்,  குறிப்பாக கல்வியை பொறுத்தரை வகுப்புகள் மாறினாலும் அனைத்து பாடங்களையும் கற்று இருப்பார்கள் என்று சொல்லமுடியாது என கூறிய அவர், அனைவருக்கும் கல்வி கிடைக்கும் வகையில் அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என்றார்.