சென்னை:

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் தமிழக மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் டிஆர்பி தேர்வுக்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, வாக்காளர் அட்டை, பான்கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஒன்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

பிப்ரவரி 14-ம் தேதியிலிருந்து 16ம் தேதி வரை வட்டார கல்வி அலுவலர் பணிக்கான இணையவழி தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக 24 கடுமையான விதிமுறைகள் டி.ஆர்.பி. அமல்படுத்தி ஆசிரியர் தேர்வு வாரியம்அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி,

தேர்வர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யக்கூடிய கடவு சீட்டை வைத்துக்கொண்டு தேர்வறைக்கு கொண்டு வரவேண்டும்.

வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் கொண்டு வரவேண்டும்.

ஹால் டிக்கெட்டில் உள்ள படத்துடன் தேர்வர் முகம் பொருந்தி இருக்க வேண்டும்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஹால் டிக்கெட்டில் இருக்க வேண்டும்.

தேர்வு மையத்திற்குள் நகை அணிந்து வர தடை

தேர்வர்கள் வெளியிலிருந்து பேனா, பேப்பர் உள்ளிட்டவற்றை தோர்வு மையத்திற்கு எடுத்து செல்ல தடை .

டி.ஆர்.பி மேஜிக் பேனா மோசடியை தடுக்க தேர்வறையிலேயே பேனா வழங்கப்படும்

வாட்ச், பெல்ட், ஷு, ஹீல்ஸ் செருப்பு அணிந்து செல்ல தடை 

அதேபோல தேர்வர்களுக்கு இந்த முறை தேர்வு நடைபெறும் பகுதியானது புதிதாக ஒதுக்கப்பட இருக்கிறது. தேர்வு நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகத்தான் அவர்கள் எந்த பகுதியில் தேர்வு எழுத போகின்றனர் என்ற தகவல் அவர்களுக்கே தெரியும் வகையில் அறிவிக்கப்படும்

தேர்வர்கள்   தேர்வு செய்திருக்கக்கூடிய நகரங்களை தவிர்த்து மற்ற இடங்களில் அவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

தூத்துகுடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் இருந்து அருகே உள்ள மாவட்டங்களை தேர்வு செய்தவர்களுக்கு சென்னை, காஞ்சிபுரம் போன்ற பகுதிகளும், அதேபோல கோயம்புத்தூரை சேர்ந்தவர்களுக்கு கரூர், திருச்சி போன்ற மாவட்டங்களையும் தேர்வு செய்யப்படும்.

அதுபோல, எந்த காரணத்தைக் கொண்டும் தேர்வு மையங்கள் மாற்றப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.