சென்னை

பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 15, 6 மற்றும் 17 தேதிகளில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 15 (திங்கட்கிழமை), 16 (செவ்வாய்க்கிழமை) மற்றும் 17 (புதன்கிழமை) ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமையின் அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

  1. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
  2. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். 
  3. மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோரயில்கள் இயக்கப்படும். 
  4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். 

பயணிகள் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.