சென்னை: பராமரிப்பு பணி காரணமாக தென் மாவட்டங்களில் விரைவு ரெயில் உள்பட சில ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுதொடர்பாக தென்னக ரெயில்வே வெலியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரெயில்பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்தும், சில ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நவம்பர் 7ந்தேதி  முதல் 12 ஆம் தேதி வரை மதுரை – செங்கோட்டை இடையிலான ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மதுரை – விழுப்புரம் விரைவு ரெயில், நவம்வர்  8ந்தேதி முதல், நவம்பர் 10-12, நவம்பர்  28-30 வரை மதுரை – திண்டுக்கல் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

பாலக்காடு – திருச்செந்தூர் விரைவு ரெயில், நவம்பர் 18, 19, 21, 22 ஆகிய நாட்களில் கோவில்பட்டி – திருச்செந்தூர் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

கோவை – நாகர்கோவில் விரைவு ரயில், சென்னை – குருவாயூர் விரைவு ரெயில் நவ.22, 25, 26ல் தாமதமாக நெல்லை செல்லும்.

நவம்பர் 30 ஆம் தேதி மதுரை – செகந்திராபாத் சிறப்பு ரயில் 45 நிமிடங்கள் தாமதமாக காலை 6.15 மணிக்கு புறப்படும்.

நவம்பர் 22, 25, 26ல் வாஞ்சி மணியாச்சியில் தூத்துக்குடிக்கு இணைப்பு ரயில் சேவை கிடையாது 

இவ்வாறு தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.