சேலம்

தெற்கு ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயங்கும் என அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே சேலம் மாவட்டம், வஞ்சிபாளையம் பனிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து வரும் 10-ந் தேதி மாலை 7.55 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி வரும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண். 22504) இருகூர் மற்றும் போத்தனூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் போத்தனூர் நிறுத்தத்தில் நின்று செல்லும், கோவை செல்லாது.

திருச்சியில் இருந்து 10-ந் தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டும் பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16843) திருப்பூர்-பாலக்காடு இடையே பகுதியளவு ரத்து செய்யப்படகிறது. இந்த ரயில் திருப்பூர் வரை மட்டும் இயக்கப்படும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.