திருநெல்வேலி

தென் மாவட்டங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையும் 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறையும் விடப்பட்டுள்ளது.

வானிலை அய்வு மையம் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. நேற்று முன் தினம் இரவு முதல் 4 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

மேலும் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பல இடங்களில் தொடர்ந்து மிக கனமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் காலை 7 மணி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு தொடர் கனமழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை  அறிவித்துள்ளது.

அதாவது திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இன்று  பொது விடுமுறை அளிக்கப்பட்டுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.