சென்னை

மிழகத்தில் தேர்தல் நேரத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன.

இன்று காலை 7 மணி முதல் தமிழகம் எங்கும் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.   நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகளுடன் வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

முதியோர், பெண்கள், முதல்  முறை வாக்காளர்கள், எனப் பல தரப்பட்டோரும் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர்.   பல அரசியல் மற்றும் திரைத்துறை பிரமுகர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற்ற போதிலும் ஒரு சில இடங்களில் இயந்திர கோளாறு ஏற்பட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன.

இதையொட்டி தமிழகம் முழுவதும் 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 134 கட்டுப்பாடு யூனிட்டுகள், மற்றும் 559 விவிபேட் இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன.  இந்த தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாக்கு தெரிவித்துள்ளார்.