திருப்பத்தூர்

மிழக அமைச்சர் கே சி வீரமணிக்கு ஆதரவாகச் செயல்பட்ட டிஎஸ்பி தங்கவேலு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வரும் ஆறாம் தேதி அன்று தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.   ஒரே கட்டமாக 6 ஆம் தேதி அன்று வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.   அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழக ஆளும் கட்சி அதிமுக அமைச்சர்களுக்கு அரசு அதிகாரிகள் உதவி வருவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுகின்றன.   இவற்றை அதிமுக அமைச்சர்கள் மறுக்கின்றன.  எனினும் தேர்தல் பார்வையாளர்கள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவ்வகையில் தமிழக அமைச்சர் கே சி வீரமணிக்கு ஆதரவாகத் திருப்பத்தூர் டி எஸ் பி தங்கவேலு செயல்பட்டதாகப் புகார் எழுந்தது  இதை விசாரித்த தேர்தல் பார்வையாளர் ஷர்மா இது சரியானது என அறிக்கை அளித்தார்.  அதன் அடிப்படையில் தங்கவேலுவை தேர்தல் ஆணையம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.