புழல்:  சிறை கைதிகளிடையே போதைபொருள், செல்போன் நடமாட்டம் அதிகரித்து வருவதால், புழல் சிறையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக சிறைகளில் அரசியல் தரப்பு மற்றும் முக்கிய கைதிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் உள்ளன. அதுபோல சென்னை புழல் சிறையிலும் பலருக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், போதைப்பொருட்கள், செல்போன் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறத.

இதையடுத்து, இன்று  புழல் சிறையில் காவல் துணை ஆணையர் ராஜாராம் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர சோதனை நடத்துகின்றனர். கைதிகளிடம் கஞ்சா, சொல்போன் பயன்பாடு உள்ளதா என்பது குறித்து புழல் சிறையில் போலீஸ் தீவிர சோதனை நடைபெறுகிறது. சிறை அறைகள், பார்ரூம், டாய்லட் போன்ற அனைத்து பகுதிகளில் சோதனை  செல்போன்கள், கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்றும் சோதனையிடப்பட்டு வருகிறத.. காலை 6 மணி முதல் இந்த சோதனை நடைபெறுகிறது.  சோதனையின் போது சிறை அதிகாரிகள், வார்டன்கள் வெளியே செல்ல காவல்துறையினர் அனுமதிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.