சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த போதை பொருள் கடத்தல் மன்னரான ஜாபர் சாதிக், அவரது சகோதரர்  தரப்பில் ஜாமின்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீது  அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

 திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த ஆண்டு (2024)  ஜூன் 26 தேதி கைது செய்தது. பின்னர் அவரது சகோதரர் முகமது சலீமை ஆகஸ்ட் மாதம் கைது செய்தது. மேலும் இயக்குனர் அமிர் உள்பட பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள  ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சார்பில் ஜாமின் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனையடுத்து ஜாமின் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் இன்று சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி சுந்தர் மோகன் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுக்கள் குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமென அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை பிப்ரவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

போதை பொருள் கடத்தலில் கிடைத்த ரூ.21 கோடியில் முக்கிய புள்ளிகளுக்கு பங்கு! ஜாபர் சாதிக்கிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்…

போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கின் நட்சத்திர ஓட்டல் உள்பட ரூ.55 கோடி சொத்துக்கள் பறிமுதல்!

போதைபொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தில் பயன்படுத்தி உள்ளார் ஜாபர் சாதிக்! அண்ணாலை குற்றச்சாட்டு…