காஞ்சிபுரம்

ரண்டு நாட்களுக்குக் காஞ்சிபுரம் நகர்ப் பகுதிகளில்  டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வரும் 15 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் தொடக்க விழா காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காகக் காஞ்சிபுரத்திற்கு வருகை தர உள்ளார்.

இதனால் மாநகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  முதல்வர் மு க ஸ்டாலின் வருகையையொட்டி காஞ்சிபுரம் மாநகர பகுதிகளில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறி டிரோன்களை பறக்கவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காஞ்சிபுரம் காவல்துறை சுப்பிரண்டு சுதாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.