கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட தால் மதுகிடைக்காமல் விழிபிதுங்கி வந்த குடிமகன்களுக்கு நாளை மதுக்கடைகள் திறக்கப்படும் என செய்தி காதில் தேனாக பாய்ந்தது.
ஆனால், கடையை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. காலையில் நடைபெற்ற விசாரணையின்போது, மதுக்கடைகளை கூட்டத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? ‘மதுக்கடைகளை திறப்பதற்கு பதில் மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியுமா? மதுக்கடைகளை திறப்பதற்கு பதில் ஆன்லைனில் மதுபானத்தை விற்க முடியுமா? வீடுகளுக்கு நேரடியாகச் சென்று டெலிவரி செய்ய முடியுமா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நிதிபதிகள் பிற்பகல் தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தனர்.
அதையடுத்து, மீண்டும் வழக்கு பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகஅரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படும் எனவும், பாதுகாப்பு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், டாஸ்மாக் மது விற்பனையை ஆன் லைனில் மேற்கொள்ள முடியாது, அத்துடன் மதுவை வீடுதோறும் சென்று டோர் டெலிவரி செய்ய முடியாது என்றும், டாஸ்மாக் கடைகளில் சமூக விலகல் பின்பற்றப்படும், பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
கொரோனா முடிய நாளாகும் என்பதால் மற்ற கடைகளைப் போல மதுக்கடைகள் திறக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாலை 5 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.
இதையடுத்து மாலை 5 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில்,
இதை ஏற்றுக்கொண்ட உயர்நீதி மன்றம், சில கட்டுப்பாடுகளுடன்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை இல்லை என்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
அதன்படி, ஆன்லைனில் மது விற்க அனுமதி வழங்குவதாகவும், ஆன்லைனில் ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு 2 பாட்டில்கள் தான் விற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
சமூக விலகல், பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.
மதுக்கடைகளை திறக்க உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து குடிமகன்கள் உற்சாகம் அடைந்தனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட தால் மதுகிடைக்காமல் விழிபிதுங்கி வந்த குடிமகன்களுக்கு நாளை மதுக்கடைகள் திறக்கப்படும் என செய்தி காதில் தேனாக பாய்ந்தது.
ஆனால், கடையை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. காலையில் நடைபெற்ற விசாரணையின்போது, மதுக்கடைகளை கூட்டத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? ‘மதுக்கடைகளை திறப்பதற்கு பதில் மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியுமா? மதுக்கடைகளை திறப்பதற்கு பதில் ஆன்லைனில் மதுபானத்தை விற்க முடியுமா? வீடுகளுக்கு நேரடியாகச் சென்று டெலிவரி செய்ய முடியுமா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நிதிபதிகள் பிற்பகல் தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தனர்.
அதையடுத்து, மீண்டும் வழக்கு பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகஅரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படும் எனவும், பாதுகாப்பு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், டாஸ்மாக் மது விற்பனையை ஆன் லைனில் மேற்கொள்ள முடியாது, அத்துடன் மதுவை வீடுதோறும் சென்று டோர் டெலிவரி செய்ய முடியாது என்றும், டாஸ்மாக் கடைகளில் சமூக விலகல் பின்பற்றப்படும், பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
கொரோனா முடிய நாளாகும் என்பதால் மற்ற கடைகளைப் போல மதுக்கடைகள் திறக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாலை 5 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.
இதையடுத்து மாலை 5 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில்,
இதை ஏற்றுக்கொண்ட உயர்நீதி மன்றம், சில கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை இல்லை என்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
அதன்படி, ஆன்லைனில் மது விற்க அனுமதி வழங்குவதாகவும், ஆன்லைனில் ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு 2 பாட்டில்கள் தான் விற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
சமூக விலகல், பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.
மதுக்கடைகளை திறக்க உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து குடிமகன்கள் உற்சாகம் அடைந்தனர்.