காட்பாடி

நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகியது ஒரு தேர்தல் திருவிளையாடல் எனத் தமிழக அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

தமிழக அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். 

அப்போது துரைமுருகன்,

”அரசியலில் கட்சிகள் நிலைப்பாடு மாறிக்கொண்டே இருக்கும்; நான் எப்போதோ பேசியதை இப்போது பரப்புவதா?. சமூக வலைத்தளங்களில் பரவும் தகவலைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை 

திமுக தனது கூட்டணி பேச்சுவார்த்தையை க. இன்னும் தொடங்கவில்லை. தற்போது காங்கிரசார் மட்டும்தான் தற்போதைக்கு பேசிவிட்டுச் சென்றுள்ளனர். திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் அதற்காக உள்ள குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

இன்னும் இந்தியா கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பது முடிவாகவில்லை.இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகியது தேர்தல் திருவிளையாடல் போன்றதுதான்..கட்சிகள்  தேர்தலின் போது கட்சிகள் கூட்டணி மாறுவது என்பது இயல்பான ஒன்றுதான். இன்று அரசியலில் எங்களை இன்று எதிர்த்து நிற்பவர்கள் அடுத்த தேர்தலில் எங்களுடன் வருவார்கள்.”

என்று கூறி உள்ளார்.