சென்னை

 ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ  கே பி கந்தன் மீது அவர் மருமகள் வரதட்சணை புகார் அளித்துள்ளார்.

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தர் அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். கே.பி.கந்தன்.  இவரது மகன் பெயர் கே பி கே சதீஷ்குமார் என்பதாகும்.  இவருக்குக் கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. 

K P Kandan

தற்போது முன்னால் திமுக சட்டமன்ற உறுப்பினர் கே [இ கந்தன் மீது அவரது மருமகள் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் வரதட்சணை புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் அவர்,

”எனது திருமணத்தின்போது 1,000 சவரன் வரதட்சணை கேட்டனர். ஆனால் 2018ம் ஆண்டு திருமணம் நடந்தபோது, 600 சவரன் தங்கம், ரூ.1.65 கோடி மதிப்புள்ள 2 கார்கள், 20 கிலோ வெள்ளி ஆகியவை கொடுக்கப்பட்டன.

என்னிடம் மீதமுள்ள 400 சவரன் வரதட்சணை கேட்டு மாமனார் மற்றும் என் கணவர் கொடுமைப்படுத்துகின்றனர்”  எனவே அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே பி கந்தன் மற்றும் அவரது மகன் கே பி கே சதீஷ்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” 

எனத் தெரிவித்துள்ளார்.