சென்னை:

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட சிகிச்சைப் பற்றி பேட்டி அளித்த   போலி டாக்டர் சீதா கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்பல்லோ நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சென்னை சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டு இருந்தார்  போலி டாக்டர் சீதா என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை கமிஷனரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆர்.கே.நகர் காவல்நிலைய போலீசார், ’மருத்துவர் என்றும், அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றுவதாகவும் பொய்யாக விளம்பரப் படுத்திக்கொண்ட போலி டாக்டர் ராமசீதாவை அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர் நியூட்ரிசியன் படிப்பு படித்துவிட்டு உணவகங்களில் வேலை பார்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.