சென்னை:
டுத்த 2 நாட்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று தி.மலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அனல் காற்று வீசக்கூடும். திருப்பத்தூர் , வேலூர், திருச்சி மாவட்டங்களிலும் இன்று 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்வதால் அனல்காற்று வீசும். 5,6 தேதிகளில் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர், கோவை, திண்டுக்கல்லில் 5 வரை வெப்பநிலை உயரக்கூடும். தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளது. வெயில் கொளுத்துவதால் பகல் 12 முதல் மாலை 4 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல சுழற்சியால் அடுத்த 48 மணி நேரத்துக்குள் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர் உள்ளிட்ட சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதுதெற்கில் இருந்து தரைக்காற்று தமிழகம் நோக்கி வீசுவதால் தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளது. நேற்று 9 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சதம் அடித்துள்ளது.9 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டியது.வேலூர்,திருத்தணி,திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு,தர்மபுரி, திருப்பத்தூர்,சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது.