சென்னை: நாளை (23-ந்தேதி) திருவள்ளுர், சென்னையில் மக்கள் கிராம சபை கூட்டங்கள் திமுக சார்பில் நடத்தப்பட் உள்ளது. இந்த கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.  ஸ்டாலின் பங்கேற்பதாக அமறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

23-ந்தேதி (நாளை) காலையில், திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம் ஊராட்சியிலும், மாலையில், சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம் ஒன்றியம் அடையாளம்பட்டு ஊராட்சியிலும் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டங்களில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.