சென்னை: திமுக வெற்றியின் உறுதியான நிலையில், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை வெளியான வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி திமுக கூட்டணி 140க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில்,  திமுக 118 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்கும் தகுதி பெற்றுள்ளது.

இதையடுத்து, சென்னை தேனாம்பேட்டையில்உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு வெளியே திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில்  தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் தடை விதித்துள்ள நிலையில், திமுக தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தை நோக்கி குவிந்து வருவரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “ வீதிகள் வெறிச்சோடட்டும், வீட்டிற்குள் இருந்தே வாக்கு எண்ணிக்கையை கவனியுங்கள்” என்று தெரிவித்திருந்தார்.  இருந்தாலும்,  பத்து வருடங்களுக்கு பிறகு, மீண்டும் ஆட்சி அமைக்கப்போகும் திமுகவை கட்சித் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.