சென்னை: நாளை மறுதினம் (டிசம்பர் 5ந்தேதி)  தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என திமுக கொறடா அறிவித்து உள்ளர்.

தமிழக சட்டமன்ற புத்தாண்டு  கூட்டத்தொடர் வரும் 5ந்தேதி ஆளுநர் உரையுடன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது. ஆளுநர் உரை முடிந்ததும் அலுவல் ஆய்வுக்குழு கூடி, கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பதை முடிவு செய்யும்.

இதையடுத்து அன்று மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில்  ‘கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்,  திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மாலை நடைபெறும்’ என  அரசு தலைமை கொறடா முனைவர் செழியன் அறிவித்து உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரில் எம்எல்ஏக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும், சபையில் விவாதிக்கப்படும் அம்சங்கள் குறித்து எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.