கடலூர்: கடலூரில் திமுக போட்டி மேயர் வேட்பாளர் தோற்றதை அடுத்து, அவரது கணவர்  தற்கொலை முயற்சி மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது ஆதரவாளர்கள் திமுக தலைமைமீது குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளனர்.

கடலூர் மாநகராட்சி சுந்தரி என்பவரை மேயர் வேட்பாளராக திமுக தலைமை அறிவித்தது. சுந்தரி திமுக நகர செயலாளர் ராஜாவின் மனைவி. இவர் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. ஆனால் மேயர் வேட்பாள பதவி தனது மனைவிக்கு கொடுக்க வேண்டும் என  கடலூர் மாவட்ட திமுக பொருளாளருமான குணசேகரன் முயற்சி எடுத்து வந்தார்.

ஆனால், நகர செயலாளர் ராஜாவின் மனைவிக்கு திமுக தலைமை ஒதுக்கியது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, நேற்று மாலை முதலே அங்கு பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து,  திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் பலர் கடத்தபட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அவர்கள் தனியார் சொகுசு ஹொட்டலில் தங்க வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை மேயருக்கான மறைமுதல் தேர்தல் நடைபெற்றது. கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் திமுக தலைமை அறிவித்த மேயர் வேட்பாளர் சுந்தரியை  எதிர்த்து திமுகவை சேர்ந்த கீதா என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்தார்.  இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போட்டியும் கடுமையாக இருந்தது.

ஆனால், திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் விரக்தியடைந்த திமுக மாவட்ட பொருளாளர் குணசேகரன் மருந்து குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த சிலர், அவரை உடனே கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டதோடு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.