டெல்லி: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்  வட தமிழக கடற்கரையை நோக்கி நகர்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்திற்குள் வட தமிழக கடற்கரையை நோக்கி நகரும்.

வட தமிழக கடலோர பகுதியில் இருந்து சுமார் 400 – 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இதுஅடுத்த 12மணி நேரத்தில் ஆழ்ந்ததாழ்வு அழுத்த மண்டலமாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

இதனால் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மற்றும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.