ஈரோடு:

திமுக மாநாட்டு திடலைச்சுற்றி வைக்கப்பட்டுள்ள 4 ஆயிரம் கொடிக்கம்பங்களும் கிராமங்களில் நடப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஈரோடு பெருந்துறை அருகே தி.மு.க மண்டல மாநாடு நடைபெற்றது. 2வது நாளான இன்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நிறைவுரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘மாநாட்டுத் திடலைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள 4 ஆயிரம் கொடிக்கம்பங்களும், ஈரோட்டில் உள்ள கிராமங்கள் தோறும் கொண்டு சென்று நடப்படும். இதன் மூலம் தொண்டர்கள் உற்சாகம் அடைவார்கள்.

மாநாட்டு முகப்பில் உள்ள கொடிக் கம்பம் அப்புறப்படுத்தப்படாமல் இதே நெடுஞ்சாலையில் அனுமதி பெற்று நிரந்தரமாக நிறுவப்படும். மாநாட்டு திடலில் வைக்கப்பட்ட கழிப்பிடங்கள் மக்கள் பயன்பாட்டிகு வைக்கப்படும்’’ என்றார்.