சென்னை

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 இடங்கள் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். பட்டியலில் 16 வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.

அப்போது எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம், தே.மு.தி.க.வுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க. – அ.தி.மு.க. இடையே நீண்ட நாட்களாகப் பேச்சுவார்த்தை நீடித்துவந்த நிலையில், இன்று அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

மக்களவைத் தேர்தலுக்காக அ.தி.மு.க., தே.மு.தி.க. இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகி உள்ளது. இந்த தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரேமலதா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள்:-

திருவள்ளூர் (தனி)

மத்திய சென்னை

கடலூர்

விருதுநகர்

தஞ்சாவூர்