இந்த தீபாவளிக்கு மொத்தம் நான்கு படங்கள் வெளியாகியுள்ளது அதில் பிரம்மாண்ட திரைப்படங்கள் காஷ்மோரா மற்றும் கொடி. காஷ்மோரா திரைப்படம் கார்த்திக் மற்றும் நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் இயக்குநர் கோகுலின் கை வண்ணத்தில் 2 வருட உழைப்புக்கு பின்னர் வெளியாகியுள்ளது.
கொடி தனுஷ் மற்றும் த்ரிஷா நடிப்பில் துரை செந்தில் இயக்கத்தில் தனுஷ் முதல் முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கும் படம்.
இந்த இரண்டு படங்களை தவிர நடிகை நதியா நடிப்பில் ”திரைக்கு வராத கதை” மற்றும் ம.கா.பா.ஆனந்த் நடிப்பில் ”கடலை” திரைப்படமும் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு படங்களுக்கும் திரையரங்குகளே சரியாக அமையவில்லை என்பதுதான் நிதர்சணமான உண்மை.
தனுஷ் தன்னை முன்னணி நடிகராக தக்கவைத்துக் கொள்ள இந்த கொடி திரைப்படம் கண்டிப்பாக ஹிட் அடிக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும் அதனால் ஹீரோவும் ஹீரோயினும் கொடியை கையில் எடுத்துக் கொண்டு ஊர் ஊராக படத்தின் புரொமோஷனுக்காக ரசிகர்களை நேரில் சந்தித்து வந்தனர். அதன் விளைவால் முதல் நான்கு நாட்களுக்கு பெரும்பாலான ஊர்களில் ரசிகர்களே மொத்த காட்சியையும் வாங்கியுள்ளனர்.
கொடி திரைப்படத்துடன் வெளியாகியுள்ளதால் காஷ்மோரா திரைப்படத்துக்கு முன்பதிவு கொடியை விட குறைவாகத்தான் உள்ளது.
நாளை காலை தீபாவளி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் நம் இணையத்தில் வெளியிடப்படும்.