சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுவிற்பனைக்கு தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி,  தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் 3 நாட்கள் மதுக்கடைகளை மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில்   செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு  அக்டோபர் 6ந்தேதியும், 2வது கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 9 ஆகிய தேதியும் நடைபெற உள்ளது. இதையொட்டி, முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் அக்.4ந்தேதி முதல் 6ந்தேதி வரை 3 நாட்களும், 2வது கட்ட தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில்  அக்டோபர் 7ந்தேதி முதல் 9 தேதி வரையிலும் 3 நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

‘காஞ்சிபுரம், செங்கல்பட்டு வேலூர், திருப்பத்தூர், ராணிபேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் 06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாகவும், ஏனைய 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக  உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் 09.10.2021-ல் ஒரே கட்டமாகவும் நடைபெற உள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 04.10.2021 காலை 10 மணி முதல் 06.10.2021 நள்ளிரவு 12 மணி வரையிலும், இரண்டாம்  கட்ட வாக்குபதிவு மற்றும் தற்செயல் தேர்தல்கள் நடைபெறும் பகுதிகளில் 07.10,2021 காலை 10 மணி முதல் 09.10.2021 நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 12.10.2021 அன்று வாக்கு எண்ணுகை நடைபெறும் பகுதிகளிலும், மேற்படி பகுதிகளுக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் மதுக்கூடம் மற்றும் மதுபானக்கடைகள் மூடியிருக்க, உரிய ஆணைகள் வெளியிட அரசை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதன்படி, மேற்படி நாட்களில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணுகை நடைபெறும் பகுதிகளிலும், அப்பகுதிக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும், பிர் ஓயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்யும் மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடம் முடுவதற்கு அரசானை எண் 35, உள், மதுமிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, நாள் 27.09.2021-ல் அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, வாக்குப்பதிவு நாளில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணுகை நாளில் வாக்குகள் எண்ணப்படும் பகுதிகளிலும், அப்பகுதிகளுக்கு அருகில் 5. கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும், பீர், ஓயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் பிற்பனை செய்வதோ அல்லது மதுக்கூடம் திறப்பதோ அல்லது அதனை இப்பகுதிகளில் எடுத்துச் செய்வதோ கடை செய்யப்பட்டுள்ளது என்றும் மீறுபவர்கள் மீது உரிய சட்டம் மற்றும் விதிகளின்படி நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.