சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை தலைவர்கள்  மாநாடு நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான செய்தியில், வருகிற 10,11,12 ஆம் தேதிகளில் சென்னையில் மாநாடு நடைபெற உள்ளதாகவும், மூன்று நாட்கள் மாநாட்டில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்டம் – ஒழுங்கு, நிர்வாக பணிகள் குறித்து மூன்று நாட்கள் மாநாட்டில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.