சென்னை:
மிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செயப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்ய சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநகரங்களில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. தனியார் மருத்துவர்கள் ரெம்டெசிவிர் மருந்தை அதிகம் பரிந்துரைப்பதால் கூட்டம் அலைமோதுகிறது.

கூட்டம் கூடுவதை தவிர்க்க இனி தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.