சென்னை:
மாற்றுத்திறனாளி வீராங்கனைகளை மற்ற வீராங்கனைகளுக்குச் சமமாக நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செவித்திறன் குன்றியோர் சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் மாற்றுத்திறனாளிகளைப் பாரபட்சமாக நடத்துவதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து மற்றவர்களுக்குச் சமமாக அவர்களை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.