சென்னை

விவசாயிகள் போராட்டம் குறித்து இயக்குநர் பா ரஞ்சித் ஆதரவாக டிவீட் பதிந்துள்ளார்.

பா.ரஞ்சித்

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  இந்த சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், அரியானா மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாயிகள் டில்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இது குறித்துப் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தும் மத்திய அரசு விவசாயிகள் கோரிக்கையை ஏற்காமல் உள்ளனர்.

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித் தனது டிவிட்டரில், “நாங்கள் விவசாயிகளுடன் நிற்கிறோம், எனவே, கடந்த சில மாதங்களாக விவசாயிகள் போராடி வரும் காரணத்திற்காக நாங்கள் ஆதரிக்கிறோம். விவசாயிகளின் போராட்டத்தையும் அதன் ஆதரவாளர்களையும் யார் கேள்வி எழுப்பினாலும், விவசாயிகளின் போராட்டம் அவர்களின் வாழ்வாதாரமான குறைந்தபட்ச ஆதார விலையைப் பற்றியது என்ற உணர்வு இருக்க வேண்டும்.

பொறுப்புள்ள மக்களாக நாம் விவசாயிகளின் எதிர்ப்பு குறித்து யார் கேள்வி எழுப்புகிறார்கள், விமர்சிக்கிறார்கள் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். தங்களின் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் விவசாயிகளை ஆதரிப்பவர்களுக்கு எதிராக சில விமர்சனங்களை நாங்கள் காண்கிறோம்” எனப் பதிந்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன், இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்ட பலரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.