சென்னை:

அதிமுக.வை தினகரன் கபளீகரம் செய்ய நினைக்கிறார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.


சென்னை தாம்பரத்தில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், ‘‘நாட்டின் தலைசிறந்த முதல்வர் ஜெயலலிதா. 28 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த ஒரே இயக்கம் அதிமுக தான். ஜெயலலிதா இல்லாத சூழ்நிலையில் அதிமுகவிற்கு சோதனை வந்தது.

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி அனைத்து மக்களையும் சென்றடைகிறது. தினகரன் கட்சியை கபளீகரம் செய்ய நினைக்கிறார், தூய தொண்டர்கள் இருக்கும் வரை அது நடக்காது’’ என்றார்.