ன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த 7ம் தேதி திடீர் மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 39. அவரது திடீர் மரணம் குடும்பத்தின ரையும் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடைசியாக சிரஞ்சீவி சார்ஜா ராஜமார்த்தாண்டா என்ற படத்தில் நடித்து வந்தார். இப்படத்தை ராம் நாராணன் இயக்குகிறார்.

சிரஞ்சீவி சார்ஜா இறந்துவிட்டதால் அவரது கதாபாத்திரத்துக்கு யாரை டப்பிங் பேச வைப்பது என்று இயக்குனர் குழப்பம் அடைந்தார். இதையறிந்த சிரஞ்சீவியின் தம்பி துருவ சார்ஜா இயக்குனரை அழைத்து சிரஞ்சீவி சார்ஜா பாத்திரத்துக்கு தான் டப்பிங் பேசி தருவதாக கூறினார். அதன் பிறகு இயக்குனர் அந்த குழப்பத்திலிருந்து வெளியில் வந்தார்.
’இதைவிட பெரிய ஆதரவை நான் எதிர்பார்க்கவில்லை’ என்று துருவ சார்ஜாவுக்கு இயக்குனர் நன்றி தெரிவித்தார்.