க்னோ

பிஎல் போட்டிகளில் இது தமது கடைசி சீசனா என்னும் கேள்விக்கு தோனி பதில் அளித்துள்ளார்.

தற்போது 16வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  அதில் இன்றைய 45-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.. இப்போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற தோனியிடம் நெறியாளர் டேனி மோரிசன், “உங்கள் கடைசி சீசனை எப்படி என்ஜாய் செய்கிறீர்கள்” எனக் கேள்வி எழுப்பினார்.

சற்றும் யோசிக்காமல் அதற்குப் பதிலளித்த தோனி, “நீங்கள் தான் இது என்னுடைய கடைசி சீசன் என்று முடிவு செய்துள்ளீர்கள். நான் இல்லை” என்று சொல்லிச் சிரித்தார்.  டேனி மோரிசன் உடனே மைதானத்தில் அமர்ந்திருக்கும் ரசிகர்களை நோக்கி, “2024-ல் தோனி மீண்டும் விளையாடுவார்” எனச் சத்தமாக  கூற ஆராவாரம் எழுந்தது.

ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் இந்த சீசனே தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் என்ற தகவல் பரவி வந்த நிலையில் தற்போது தோனியே இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.