போரூர்: வாகன சோதனையின்போது ஆட்டோ மோதி காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டரை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் காவல்துறையினர் வாகன சோதனைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதுபோல, நேற்று போரூர் அருகே உள்ள நந்தம் பாக்கத்தில் வாகனை சோதனை நடத்திக்கொண்டிருந்தபோது, வேகமாக வந்த ஆட்டோ, அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் என்பவரை  இடித்து தள்ளிவிட்டு சென்றது. இதனால் காயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில், காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு நேரில் சென்று டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆறுதல் கூறினார். இன்று காலை திடீரென காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வீட்டிற்கு வந்த டி.ஜி.பி சைலேந்திரபாபு அவருக்கு ஆறுதல் கூறியதுடன்,  தேவையான மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று அவரது மனைவி, மகன்கள் மற்றும்குடும்பத்தினரிடம் உறுதி அளித்தார்.