சென்னை: இன்று சனிப்பெயர்ச்சி. இதையொட்டி, திருநாள்ளாறு தார்பணயேஸ்வரர் கோவிலில் உள்ள சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மேலும், நாடு முழுவதும் உள்ள சனி பகவான் ஸ்தலங்களில் சிறப்பு பூசைகள் நடைபெறுவதால், பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

இன்று டிசம்பர் 20ம் தேதி மாலை சனிபகவான்  மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.  இன்று ( 20ம் தேதி)  மாலை சரியாக 5:20 மணிக்கு சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியடைகிறார்.

காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. நவக்கிரக ஸ்தலங்களில் சனிபகவானுக்குரிய இந்த கோவிலில், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைப்பெறும் சனிப்பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு, சனிப்பெயர்ச்சி விழா இன்று நடைபெறுகிறது. இன்று மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். அப்போது சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வழிபாடுகளும் நடைபெறும்.

நவகிரகங்களில் சனியைப் பார்த்து பயப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். சனி பெயரச்சி இடத்தைப் பொருத்து பலன்களும் பாதிப்பும் ஏற்படும். அந்த வகையில் சனிபகவான் கும்பம் ராசியில் ஆட்சி பெறுகிறார். மேலும் இந்த சனி பெயர்ச்சியால் மேஷம் லாப சனி, ரிஷபம் தொழில் சனி, மிதுனம் பாக்ய சனி, கடகம் அஷ்டமத்து சனி, சிம்மம் கண்டச்சனி, கன்னி ருண ரோக சத்ரு சனி, துலாம் புண்ணிய சனி, விருச்சிகம் அர்த்தாஷ்டம சனி, தனுசு தைரிய சனி,மகரம் பாத சனி, கும்பம் ஜென்ம சனி, மீனம் விரைய சன என பலன்கள் நடைபெறும்.

சனிப்பெயர்ச்சி விழாவினையொட்டி திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று முதலே குவிய துவங்கியுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக இன்று காலை 6 மணி முதல் நாளை டிசம்பர் 21ம் தேதி காலை 6 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்தில் இருந்து கோவில் வரை இலவச பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இந்த ஆலயத்தில் அமர்ந்திருக்கும் ஈசனின் திருப்பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர். அம்பிகை பிராணேஸ்வரி. நளமகாராஜனை, சனிபகவானின் பிடியிலிருந்து விடுவித்து, மீண்டும் வளமான வாழ்க்கையை அளித்ததால் நள்ளாறு என்றழைக்கப்படுகிறது. இந்த தலத்தில் வீற்றிருக்கும் ஈசன், சுயம்புவாக தர்ப்பை வனத்தில் தோன்றியதால் ஈசன் இன்றும் தர்ப்பைத் தழும்புகளுடன் காட்சி தருகிறார்.

இந்த தலத்தில் சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சனீஸ்வர பகவான் இன்றைய சனிப்பெயர்ச்சி விழாவினையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இப்போதே குவிந்து வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு சிறப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.