ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் 60 அடிக்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கடந்த 3 தினங்களுக்கு மேலாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முகுந்ராயர் சத்திரம், அரிசல்முனை உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றம் அடைந்து அலைகள் ஆக்ரோஷத்துடன் எழுந்து வருகின்றன. இந்நிலையில் ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் திடீரென கடல் நீர் 50 அடிக்கு உள்வாங்கியதால் புனித நீராட வந்த பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் கடலுக்கு உள்ளே இருந்த பவளப்பாறைகள், பழைய சாமி சிலைகள் அனைத்தும் வெளியே தெரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.