சென்னை

னமழை காரணமாக இன்று தமிழகத்தில் சில மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்து வருகிறது.   பல இடங்களில் கனமழை காரணமாக வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

கனமழையையொட்டி கீழ்க்கண்ட இடங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம்  வால்பாறை வட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது

மேலு, திண்டுக்கல் மாவட்டம்  கொடைக்கானல், சிறுமலை பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தேனி மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.