நெட்டிசன்

Prabaharan Alagarsamy  அவர்களின் முகநூல் பதிவு:

 மக்களே, இதை நன்றாக கவனிக்கவும். இந்த சுற்றறிக்கையை வழங்கியிருப்பது, “இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம்”.

நன்றாக மீண்டும் கவனிக்கவும், அலோபதி என்று சொல்லப்படுகிற ஆங்கில மருத்துவம் என்று சொல்லப்படுகிற நவீன அறிவியல் மருத்துவத்திற்கான ஆணையரகம் அல்ல.

இந்த சுற்றறிக்கையை வழங்கியிருப்பது, “இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம்”.

அதாகப்பட்டது, அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு ஓமியோபதி மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு காய்ச்சலுடன் வருகின்ற நோயாளிகளை, உள்நோயாளிகளாக சேர்க்காமல், நவீனமுறை மருத்துவமனைகளுக்கு அதாவது அலோபதி மருத்துவமனைகளுக்கு உயர் சிகிச்சைக்காக பரிந்துரைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்!

இந்த சுற்றறிக்கையை பரவலாக பகிர்ந்து ஆயிரக்கணக்கானோர் உயிரைக்காக்க உதவுங்கள்