நாகர்கோவில்:
மிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு நாகர்கோவில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து  உள்ளது.
download
கடந்த 2015-ம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயதாரணி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற போது விஜயதாரணி ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து விஜயதாரணிக்கு எதிராக நாகர்கோவில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உள்ளது.
ஜெயலலிதா மீதே அவதூறு வழக்கு தொடுத்தவர் விஜயதரணி என்பதும் அந்த வழக்கு தற்போது நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.