நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்துடன் தொடர்புடைய ஒரு போதைப்பொருள் வழக்கில் நடந்து வரும் விசாரணையில், பாலிவுட் நட்சத்திரம் தீபிகா படுகோனின் வாட்ஸ்அப் சாட் வெளிவந்துள்ளது.

அந்த சாட்-ல் தீபிகாவின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷின் பெயரும் வெளிவந்துள்ளது. இது குறித்து NCB மேலும் விசாரணையை துவக்கியுள்ளது.

சுஷாந்தின் மரணத்துடன் தொடர்புடைய போதை மருந்து வழக்கில் நடிகை ரியா சக்ரவர்த்தியை NCB ஏற்கனவே கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.