சென்னை: தமிழக அமைச்சரவை வரும் 30 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருநாள் முன்னதாக வரும் 29ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும்,  வரும் 30 ஆம் தேதி நடைபெற இருந்த தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் ஒரு நாள் முன்னதாக வரும்29 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டத்தில், பரந்துார் விமான நிலையம், புதிய தொழிற்கொள்கை, கல்விக்கொள்கை உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, முடிவு எடுக்கப்படலாம் என  என எதிர்பார்க்கப்படுகிறது.