சென்னை:  நடப்பு கல்வியாண்டில் கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,31,173 பேர் சேர்ந்துள்ளனர் என அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் மொத்தம் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருந்தன.  இதற்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் நடத்தப்பட்டது. முன்னதாக நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 27-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 4 லட்சத்து 7,045 மாணவர்கள் சேர்க்கைக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையிலி, இன்று  கலை அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களோடு இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  மாதம் மாதம் ஆலோசனை கூட்டம் நடைபெறும். அதில், தலைமை ஆசிரியர் ஆலோசனை கூட்டம், துணை வேந்தர்கள் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம். இன்று கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளோம் என கூறினார் .

கலைஞர் ஆட்சி காலத்தில் தான் கல்லூரியில் ஷிப்ட் முறை என்பது நாங்கள் ஆரம்பித்தோம். காலை – மாலை என் இரு வேளைகளில் கலை கல்லூரிகள் செயல்படு கிறது. தமிழக மாணவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்காமல் இருந்துவிடகூடாது என்பதற்காகவே இந்த ஷிப்ட் முறை கொண்டுவரப்பட்டது.

தமிழக கலை அறிவியல் கல்லூரிகளின் உட்கட்டமைப்பை சரி செய்வதற்காக முதல்வர் 1000 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். ஆலோசனை கூட்டத்தில் வைக்கப்படும் கோரிக்கைகள் மூலம் கலோரிகளின் நிலை அறிந்து அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்டும் எனவும் விளக்கம் அளித்தார் என்றார்.

மேலும்,  கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 70 ஆயிரம் பேர் வரை, கலை, அறிவியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தனர். அதில் விண்ணப்பங்களை முழுமை யாக பூர்த்தி செய்து, கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க முடியும். அதன்படி, தகுதிபெற்ற மாணவர்களின் விவரங்கள் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர் அது ஆய்வு செய்யப்பட்டு,  தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு மாணாக்கர்கள் சேர்க்கை நடை பெற்றது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  நடப்பு கல்வியாண்டில் கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,31,173 பேர் சேர்ந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.  மேலும், கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியிடங்களில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றவர்,  கல்லூரிகளில் பேராசிரியர்களின் காலியிடங்கள் குறித்த விவரம் கேட்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறியவர்.   “காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் கல்லூரிகளில் வகுப்பு நடத்தும் திட்டத்தை கொண்டுவந்தது திமுக அரசுதான். மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை என்ற நிலை ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில்தான் நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

வரும் 23-ம் தேதி கல்லூரி துணை வேந்தர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தை உயர் கல்வி துறைதான் நடத்துகிறது. சார்பு வேந்தர் (Pro Chancellor) என்ற அடிப்படையில்தான் இந்தக் கூட்டத்தை நான் நடத்துகிறேன் என்றார்.

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு, ஆய்வுக்கூட வசதிகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்துவதற்காக தமிழக முதல்வர் ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ளார். கல்லூரிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து இன்று கல்லூரி முதல்வர்களுடன் உடனான ஆலோசனையில் கலந்துரையாடி உள்ளோம். கல்லூரிகளில் உள்ள குறைகள் விரைவில் சரிசெய்யப்படும்” என்றார்.

உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான டிஆர்பி தேர்வு குறித்து எழுப்பபட்ட கேள்விக்கு, “4000 பணியிடங்களுக்கான அந்தத் தேர்வில் கவுரவ விரிவுரையாளர்களும் கலந்துகொள்ளலாம். கவுரவ விரிவுரையாளர்களின் பணி அனுபவத்தின் அடிப்படையில் வருடத்திற்கு 2 மதிப்பெண்கள் வீதம், ஏழரை ஆண்டுகள் பணி அனுபவமுள்ள கவுரவ விரிவுரையாளர்களாக இருந்தால் 30 மதிப்பெண்களுக்கான நேர்முகத் தேர்வில் 15 மதிப்பெண்கள் முழுமையாக கொடுக்கப்படும். நேர்முகத் தேர்வின் மொத்த மதிப்பெண்களே 30 தான்.

இவ்வளவு காலமாக ஆசிரியர்களாக இருந்தவர்கள் தேர்வு எழுதுவதற்கு என்ன பிரச்சினை? என்னிடம்கூட டிஆர்பி தேர்வு குறித்து சிலர் பேசினர். அவர்களிடம் தேர்வு எழுதும்படி நான் சொல்லிவிட்டேன்” என்று அவர் கூறினார்.