டெல்லி: நாடு முழுவதும் செயல்பட்டு வரும் மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் முதுகலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு (CUET) விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான கால அவகாசம் ஏப்ரல் 19ந்தேதி வரை என தெரிவிக்கப்பட்டு  உள்ளது.

மத்தியஅரசு கடந்த ஆண்டு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்க்கியது.  அதே நேரத்தில் மாநில அரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் க்யூட் நுழைவுத் தேர்வைப் பின்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் கியூட் தேர்வை பின்பற்ற மாட்டோம் என அறிவித்து உள்ளது.

இநத் நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில்  இளங்கலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த தேர்வானது,  என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்றும்,   இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. என்றும் கூறியுள்ளது.

அதுபோல,  ,மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் 2023-24ஆம் கல்வி ஆண்டுக்கானமுதுகலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET) ஜூன் மாதம் 1 முதல் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளியாக உள்ளன. ஆகஸ்ட் 1 முதல் புதிய கல்வியாண்டைத் தொடங்கலாம் என்று பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பப் பதிவு மார்ச் 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19 வரை இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள்  என்ற இணையதளத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

கணினி முறையில் சுமார் 20 பாடங்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்த உள்ளது. நாடு முழுவதும் 547 நகரங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 13 நகரங்களிலும் க்யூட் தேர்வுக்காகத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பின்படி இதுவரை 142 பல்கலைக்கழகங்கள் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கையை நடத்தப் பதிவு செய்துள்ளன. எனினும் இளங்கலைப் படிப்புகளுக்குப் போல, முதுகலைப் படிப்புகளுக்கு க்யூ நுழைவுத் தேர்வு இதுவரை கட்டாயமாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.