தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தமிழகம் முழுதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அலங்கநல்லூரில் நேற்று காலை முதல் நடந்து வந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் ஈடுபட்டனர்.  இன்று காலை அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர். இதை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் பிரபல கிரிக்கெட் வீரர் கைஃப்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

“ ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ் சகோதரர்கள் நடத்திவரும் போராட்டத்தின்  தீவிரம் மற்றும் அர்ப்பணிப்பு வியப்பளிப்பதாக  உள்ளது. ஒரு காரணத்துக்காக ஒன்றிணைந்து அர்ப்பணிப்புணர்வுடன் போராடும் அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்” என்று கைஃப் தனது பதிவில் கூறியிருக்கிறார்.