மதுரை:

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிய கம்யூனிஸ்டு  கட்சிக்கு மதுரை, திருப்பூர்  தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள்  பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்  நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி கள் குறித்து இன்று திமுக தலைவர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி தனது வேட்பாளர்களின் பெயர்களை தெரிவித்து உள்ளது. கோவையில் பி.ஆர்.நடராஜன் போட்டியிடுவதாகவும், மதுரையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டு  உள்ளது.

பி.ஆர். நடராஜன் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியில் 1968ம் ஆண்டு முதல் இருந்து வருவதாகவும், பல்வேறு பொறுப்புகளை வகித்த மூத்த உறுப்பினர் என்று கூறப்படுகிறது. அதுபோல, மதுரைத் தொகுதியில் போட்டியிடும் எழுத்தாளர் சு. வெங்கடேசன் காவல் கோட்டம் என்ற நூலுக்காக  சாகித்ய அகாடமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.