இயக்குனர் அருண் பிரபு, தற்போது இயக்கி வரும் படம் ‘யாழ்’ இந்த படத்தில் 90 வயது நிரம்பிய எஸ்.என். பட் என்பவரை ஹீரோவாக நடிக்க வைத்துள்ளார்.

நடிகர் எஸ்.என்.பட், 1982ல் வெளியான ‘மூன்றாம் பிறை’ படத்தில் டாக்டராக நடித்துள்ளார். ‘காற்றின் மொழி’, ‘மதராசபட்டினம்‘, ‘திருமணம் என்னும் நிக்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அவருக்கு 90 வயதாகிறது. இந்நிலையிலும், அவர் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.